|
|
|
|
|
|
Home >> India News |
|
அரசுக்கு எதிராக போராட்டம்: இடதுசாரிகள் - மாயாவதி அறிவிப்பு
|
|
திகதி
:
Thursday, 24 Jul 2008,
[Sindhu] |
அணு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிகள் - மாயாவதி அணி அறிவித்துள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட மூன்றாம் அணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. |
|
பொருளாதார தாராளமயம் விரிவுபடுத்தப்படும்: ப. சிதம்பரம்
|
|
திகதி
:
Thursday, 24 Jul 2008,
[Sindhu] |
பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் இதை தெரிவித்தார். |
|
எம்.பி.க்களுக்கு லஞ்சம்: உடனடி விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும்; அத்வானி கோரிக்கை
|
|
திகதி
:
Thursday, 24 Jul 2008,
[Sindhu] |
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் பக்கன் சிங், மகாவீர் பகோரா, அசோக் அர்கல் ஆகிய 3 பேரும் ஓட்டெடுப்பை புறக்கணிக்க ஆளும் கட்சி தரப்பில் முன்பணமாக தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக கூறி அந்த பணத்தை கட்டுக் கட்டாக எடுத்துக் காட்டினார்கள். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. |
|
கட்சியிலிருந்து சோம்நாத் நீக்கம்: மார்க்சிஸ்ட் நடவடிக்கை
|
|
திகதி
:
Wednesday, 23 Jul 2008,
[Sindhu] |
|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுக்கு இடதுசாரிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்ற பின்னரும், கட்சியின் கட்டளைப்படி மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக சோம்நாத் சாட்டர்ஜி மறுத்துவிட்டார். |
|
பிரதமரை பேசவிடாமல் கூச்சல் : அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்கள்
|
|
திகதி
:
Tuesday, 22 Jul 2008,
[Sindhu] |
மத்திய அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் குரல் ஓட்டு மற்றும் எலக்ட்ரானிக் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் ஆதரவாக 253 பேரும், எதிராக 232 பேரும் ஓட்டளித்தனர். மொத்தம் 487 பேர் ஓட்டளித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற ஓட்டுச்சீட்டு முறையில் அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்களும் . எதிராக 256 ஓட்டுக்களும் கிடைத்தன. |
|
அரசை கவிழ்ப்பது பா.ஜ.க. வழக்கமல்ல: அத்வானி
|
|
திகதி
:
Monday, 21 Jul 2008,
[Sindhu] |
அரசுகளை கவிழ்ப்பது பாரதிய ஜனதாவின் வழக்கம் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறினார். அரசு மீது நம்பிக்கை கோரி பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய அத்வானி இவ்வாறு கூறினார். |
|
நாட்டு நலனுக்காகவே அணு ஒப்பந்தம்: பிரதமர்
|
|
திகதி
:
Monday, 21 Jul 2008,
[Sindhu] |
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். |
|
அணுகுண்டு சோதனையை எதிர்த்தவர் மன்மோகன் சிங்: அத்வானி
|
|
திகதி
:
Monday, 21 Jul 2008,
[Sindhu] |
|
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது அதை எதிர்த்தவர் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானி குறிப்பிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில் அவர் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். |
|
வாக்கெடுப்புக்கு முன் மன்மோகன் ராஜிநாமா இல்லை: காங்கிரஸ்
|
|
திகதி
:
Sunday, 20 Jul 2008,
[Sindhu] |
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்யமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். வாக்கெடுப்பில் மன்மோகன் சுலபமாக வெற்றி பெறுவார் என்பதால் ராஜிநாமா என்ற கேள்விக்கே இடமில்லை என நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறினார். |
|
பஸ்ஸில் குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் சாவு
|
|
திகதி
:
Sunday, 20 Jul 2008,
[Sindhu] |
காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. |
|
இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது: ப. சிதம்பரம்
|
|
திகதி
:
Saturday, 19 Jul 2008,
[Sindhu] |
இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. சர்வதேச தர நிறுவனமான ஃபிட்ச் அளித்த அறிக்கை குறித்து கவலையடையத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்றும் அவர் கூறினார். |
|
அணு ஒப்பந்தத்துக்காக "ரிஸ்க்" எடுக்கலாம்: ராகுல் காந்தி
|
|
திகதி
:
Wednesday, 16 Jul 2008,
[Sindhu] |
அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக "ரிஸ்க்' (ஆட்சிக்கு ஆபத்து) எடுக்கலாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமரின் உறுதிப்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டினார். |
|
|
|
|