| இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: நிருபமாராவ் தெரிவிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:46.06 AM ] |
இலங்கை ராணுவத்தின் வசம் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது என்று நிருபமாவ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| மதுரையில் திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும்: ஜெயலலிதா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:35.44 AM ] |
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தாலும், திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார். [மேலும்] |
|
| அரசுக்கெதிரான போராட்டம் வேண்டாம்: மு.கருணாநிதி |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:32.25 AM ] |
தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். [மேலும்] |
|
| ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் இடைநீக்கம் ரத்து |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:28.39 AM ] |
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் தாற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டான்சியின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்படுகிறார். [மேலும்] |
|
| உத்தரப் பிரதேசத்தில் புதிய மாநிலம் உருவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:22.31 AM ] |
புதிய மாவட்டம் உருவாக்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியுள்ளது, மாயாவதி அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது [மேலும்] |
|
| கிராமப்புற வளர்ச்சியே ராஜீவ் காந்தியின் கனவு: ராகுல்காந்தி |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:17.33 AM ] |
ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் இணையதள வசதி கொடுக்கப்பட வேண்டும். இது வளர்ச்சி பாதையில் நடைபோட வழிவகுக்கும். கிராமப்புற வளர்ச்சியே ராஜீவ் காந்தியின் கனவு, இந்தக் கனவை நாம் நனவாக்குவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| மத்திய அரசு, பல குறைபாடுகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:13.18 AM ] |
ஸ்பெக்டரம் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஊழல் என அனைத்துத் துறைகளிலும் ஊழல், மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி என மத்திய அரசு, பல குறைபாடுகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| இந்தியத்தொழிலாளிகளை இலங்கை மறு குடியமர்வு பணிகளில் ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:59.40 AM ] |
இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். [மேலும்] |
|
| தமிழக சட்ட மேலவைக்கான தொகுதி வரையறைக்குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு வேண்டும்: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:45.38 AM ] |
தமிழக சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை குறித்த பிரச்னைகளை ஆராய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். [மேலும்] |
|
| மாணவர் அசோக் மீதான தாக்குதல் வழக்கில் 7 போலீஸார் இடைநீக்கம் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:39.34 AM ] |
திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தக் காவல் நிலையத்தின் 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 போலீஸôர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி லத்திகா சரண் அறிவித்துள்ளார். [மேலும்] |
|
| கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது: ஏ.பி. பரதன் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:34.20 AM ] |
கம்யூனிஸ்டுகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறினார். [மேலும்] |
|
| கலைஞர் 87 நூல் நேற்று வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:27.41 AM ] |
கருணாநிதியின் 87 வயதைக் குறிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் தமிழகத் தலைவர்கள் என 87 பேர் அவரைப் பற்றி தெரிவித்த கருத்துகள் கலைஞர் 87 என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி தொகுத்துள்ள அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாதமியில் புதன்கிழமை நடைபெற்றது. [மேலும்] |
|
| இந்திய சீன எல்லையில் சாலையமைக்கும் பணி தீவிரம்: ப.சிதம்பரம் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:18.16 AM ] |
இந்திய- சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். [மேலும்] |
|
| எந்நேரத்திலும் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கலாம்: ஆஸ்த்ரேலியா எச்சரிக்கை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:57.40 AM ] |
இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து ரகசியமான தகவல் தொடர்ந்து எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்த எச்சரிக்கையை இந்தியாவில் பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று ஆஸ்த்ரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
|
| நாளை ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவுநாள் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:47.18 AM ] |
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதையறிந்ததும் ஆந்திராவில் ஏராளமான தொண்டர்கள் அதிர்ச்சி தற்கொலையில் இறந்து போனார்கள். ராஜசேகர ரெட்டியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடை பிடிக்கப்படுகிறது [மேலும்] |