| இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: நிருபமாராவ் தெரிவிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:46.06 AM ] |
இலங்கை ராணுவத்தின் வசம் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது என்று நிருபமாவ் தெரிவித்துள்ளார். |
| இந்தியத்தொழிலாளிகளை இலங்கை மறு குடியமர்வு பணிகளில் ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:59.40 AM ] |
இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். |
| கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:55.27 AM ] |
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கையில் கிருஷ்ணா இவ்வாறு கூறினார். |
| நிருபமாராவ் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்திக்கமாட்டார்: சிறீலங்கா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:51.26 PM ] |
நிலையில் நிருபமாராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தலைவர்கள் யாரும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை தெரிய வந்துள்ளது. நிருபமாராவின் கொழும்பு நிகழ்ச்சி நிரல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை நிருபமா சந்திப்பதற்கான விபரம் எதுவும் இடம்பெறவில்லை. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள புனரமைப்பு நிதி பயன்படவில்லை: பழ.நெடுமாறன் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 03:54.16 AM ] |
இலங்கையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள புனரமைப்பு நிதி பயன்படவில்லை என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். |
| இராணுவத்தளபதி விரைவில் இலங்கை பயணம் |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:33.47 AM ] |
இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு தமிழர் பகுதியில் இந்தியா ஒத்துழைப்புடன் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் இன்று இலங்கை செல்கிறார். இதை தொடர்ந்து இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் இலங்கை செல்ல இருக்கிறார். |
| இலங்கை சிறையில் வதைபடும் மீனவர்கள் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 03:12.40 AM ] |
இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர். |
| தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 02:52.59 AM ] |
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். |
| இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 02:48.18 AM ] |
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்குவதாக அரசியல் தீர்வு இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். |
| கருணாநிதி முனைப்புடன் செயல்பட்டிருந்தால் இலங்கையில் போர் நடைபெறாமல் செய்திருக்க முடியும்: வைகோ |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 07:03.00 AM ] |
முதல்வர் கருணாநிதி முனைப்புடன் செயல்பட்டிருந்தால் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கையில் போர் நடைபெறாமல் செய்திருக்க முடியும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், ஆட்சி பறிபோகும் என்ற காரணத்தினாலேயே மத்திய அரசின் போர் ஒத்துழைப்புக்கு திமுக அரசும் ஆதரவாக இருந்துவிட்டது என்று வைகோ தெரிவித்துள்ளார். |
| என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது பிரபாகரனுக்கு நன்றாகத் தெரியும்: வைகோ |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 04:39.09 AM ] |
விடுதலைப் புலிகளுக்கு நானோ, நெடுமாறனோ எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. ஈழத் தமிழர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது எல்லோரையும்விட பிரபாகரனுக்கு நன்றாகத் தெரியும். அவரின் முடிவுக்கு எங்களால் ஆன உதவிகளை மட்டுமே செய்து வந்தோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். |
| வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம்: தா.பாண்டியன் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 02:39.38 PM ] |
இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி பேர் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை. நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார். |
| இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கை பயணம் |
| [ வியாழக்கிழமை, 19 ஓகஸ்ட் 2010, 09:39.20 AM ] |
இலங்கையில், போர் பாதித்த பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வுப்பணிகளையும் பார்வையிடுவதற்காகவும், அங்குள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகள் என்ன என்பதை பார்த்து அறிந்து வருவதற்காகவும், வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுவதாக நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். |
| இலங்கைத் தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்த கட்சி காங்கிரஸ் மட்டுமே: கார்த்தி சிதம்பரம் |
| [ வியாழக்கிழமை, 19 ஓகஸ்ட் 2010, 05:09.41 AM ] |
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து காங்கிரஸ் கட்சி அதிகமாக பேசாததால் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்த கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
| இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் இந்திய உதவி ஓராண்டு நீட்டிப்பு |
| [ வியாழக்கிழமை, 19 ஓகஸ்ட் 2010, 05:02.01 AM ] |
இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. |
|