அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதால் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராசபக்சேவுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெற மத்திய அரசும்,தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.மாநிலங்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக் கடந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதி, இந்திய ராணுவ மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிசத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.மாவோயிஸ்ட் தீவிர வாதிகளில் உள்ள கிறிஸ்த வர்கள் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்ததால் ஒரிசா மாநில பழங்குடியினத்தவர்கள் குறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
புதுமுக சினிமா டைரக்டர் செல்வா கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். செல்வா கொலை செய்யப்பட்ட தினத்தன்று புதுமுக நடிகை சங்கீதாதான் அவரது அறையில் தங்கியிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை குறி வைத்து தீவிரவாதிகள் குண்டு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.கடந்த ஜுலை மாதம் 25ந் தேதி பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன.அதைத் தொடர்ந்து ஆமதாபாத்,டெல்லி நகரங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன.
காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலை அருகே அனுமதியின்றி இயங்கி வரும் 2கல் குவாரிகளை மூடக்கோரி 500க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இருங்கள் என்று சஜன் புஜ்பலுக்கு சிவசேனை தலைவர் பால் தாக்கரே அறிவுரை கூறியுள்ளார்.சிவசேனை கட்சியில் 25ஆண்டுகள் இருந்து 1991-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு மாறிய சஜன் புஜ்பால் பின்னர் சரத் பவாரின் தேசியவாத கட்சிக்கு மாறினார்.
பாதுகாப்பு அமைச்சர் தன்னை கண்டித்ததாக வெளியான செய்தியை கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா மறுத்துள்ளார்.முப்படையினருக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள சம்பள விகிதம் குறைவாக இருப்பதாகவும்,சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரிசாவில் விஎச்பி தலைவர் லட்சுமணானந்தா சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆமதாபாத், தில்லி மற்றும் பிற இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 5 பேர் புனேவில் கைது செய்யப்பட்டனர்.
உலகப் பொருளாதார நெருக்கடி வளரும் நாடுகளுக்குக் கடும் சவாலாக இருக்கும் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் துணை அமைப்புகளும் செயலற்று இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில் திங்கள்கிழமை திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வருக்கு கரூரிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதைதொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் தனிப் படை போலீஸர் கரூரில் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் வெடிகுண்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த,தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று தனது 7 தி.மு.க.அமைச்சர்களையும் திரும்ப பெறுவதுதான் தமிழ் இனத்தின் வாழ்வுக்கு தி.மு.க.அனுப்புகின்ற சிறந்த தந்தியாகும் என்று சமுத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதவெறி சக்திகளின் கொடூரமான போக்கை தடுக்க மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: