| பெரியாறு அணை வழக்கில் மீண்டும் ஒரு குழு தேவையில்லை: தமிழக அரசு மனு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:33.40 AM ] |
‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. |
| 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவர்களுக்கு திறனறிதல் தேர்வு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:15.44 PM ] |
மருத்துவர்களின் திறனை அறிய ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. |
| ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் மகளிர் தின வாழ்த்து |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:38.09 AM ] |
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பெண்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| கோவா கடற்கரையில் நீச்சல் உடைக்கு தடையில்லை: அரசு அறிவிப்பு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:32.23 AM ] |
வெளி நாட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதற்காக நீச்சல் உடையில் கடலோரத்தில் சென்று வர தடை இல்லை என்று கோவா அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆந்திராவில் பி.டி.பருத்தி பயிரிட்டதால் பல கோடி நட்டம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:18.07 AM ] |
பி.டி.பருத்தி பயிரிட்டதால் பல கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் ஆந்திரப்பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். |
| பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால் நகரங்களை கைப்பற்றுவோம்: நக்சல் போராளிகளின் தலைவர் எச்சரிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:45.05 PM ] |
பேச்சுவார்த்தை நடத்த முன்வராவிட்டால், தாக்குதல் நடத்தி நகரங்களை கைப்பற்றுவோம் என மத்திய அரசுக்கு நக்சல் கம்யூனிஸ்ட் போராளிகளின் தலைவர் கிஷன்ஜி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். |
| பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது கவலையளிக்கிறது: பாதுகாப்புத் துறை அமைச்சர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:37.45 AM ] |
நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவது கவலையளிப்பதாக உள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:32.10 AM ] |
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிப்பது பற்றி பேசுவதற்காக நீதிக்குழுக் கூடும் தேதியை அறிவிக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. |
| உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு: பிரதமர் தெரிவிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 05:43.16 AM ] |
சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தொடர்ந்து, பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். |
| ஆஸ்த்திரேலியாவில் இந்திய குழந்தை கொலைக்கு இனவெறி காரணமா? |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:40.54 AM ] |
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு சோகம் தொடர்கிறது. சுற்றுலா வந்த குடும்பத்தின் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது. கொலை யாளி பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். |
| பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துக்கொன்ற பாதிரியார் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:27.37 AM ] |
கேரளாவில் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக பாதிரியார் கைது செய்யப்பட்டார். |
| நெரிசலில் 65 பேர் பலியான சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்கு |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 05:19.15 AM ] |
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 65 பெண்கள், குழந்தைகள் பலியானது தொடர்பாக ஆசிரம நிர்வாகம் மீது போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆசிரமத்தை நடத்தி வரும் கிரிபாலு மகாராஜ் தலைமறைவாகி விட்டார். |
| உபி.யில் கோயில் நெரிசலில் சிக்கி 65 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:16.24 PM ] |
உத்திரபிரதேச மாநிலத்தில் ராம் ஜானகி கோயிலில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. |
| பாபா அணு ஆய்வு மைய பெண் விஞ்ஞானி தற்கொலை |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:11.07 PM ] |
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 27 அகவையான இளம் பெண் விஞ்ஞானி அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்ப பெறுவதாக இல்லை: சோனியாகாந்தி, மன்மோகன்சிங் அறிவிப்பு |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 09:02.32 AM ] |
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பபெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார். |
|