| சட்டம் இயற்றினால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும்: ஆர்எஸ்எஸ் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:31.12 AM ] |
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும் என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் குறிப்பிட்டார். |
| உத்தரப் பிரதேசத்தில் புதிய மாநிலம் உருவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:22.31 AM ] |
புதிய மாவட்டம் உருவாக்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியுள்ளது, மாயாவதி அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது |
| கிராமப்புற வளர்ச்சியே ராஜீவ் காந்தியின் கனவு: ராகுல்காந்தி |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:17.33 AM ] |
ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் இணையதள வசதி கொடுக்கப்பட வேண்டும். இது வளர்ச்சி பாதையில் நடைபோட வழிவகுக்கும். கிராமப்புற வளர்ச்சியே ராஜீவ் காந்தியின் கனவு, இந்தக் கனவை நாம் நனவாக்குவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். |
| மத்திய அரசு, பல குறைபாடுகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:13.18 AM ] |
ஸ்பெக்டரம் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஊழல் என அனைத்துத் துறைகளிலும் ஊழல், மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி என மத்திய அரசு, பல குறைபாடுகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் தெரிவித்துள்ளார். |
| கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது: ஏ.பி. பரதன் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:34.20 AM ] |
கம்யூனிஸ்டுகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறினார். |
| இந்திய சீன எல்லையில் சாலையமைக்கும் பணி தீவிரம்: ப.சிதம்பரம் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:18.16 AM ] |
இந்திய- சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| எந்நேரத்திலும் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கலாம்: ஆஸ்த்ரேலியா எச்சரிக்கை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:57.40 AM ] |
இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து ரகசியமான தகவல் தொடர்ந்து எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்த எச்சரிக்கையை இந்தியாவில் பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று ஆஸ்த்ரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| கேரளாவில் மீண்டும் சர்ச்சையைக்கிளப்பும் கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:50.42 AM ] |
கேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார். அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ் திரிகளை “செக்ஸ்” கொடு மைக்கு ஆளாக்கு வதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது இதே போன்ற புத்தகம் ஒன்றை பாதிரியார் ஒருவர் எழுதி இருக்கிறார். அவரது பெயர் கே.பி.சிபு. |
| நாளை ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவுநாள் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:47.18 AM ] |
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதையறிந்ததும் ஆந்திராவில் ஏராளமான தொண்டர்கள் அதிர்ச்சி தற்கொலையில் இறந்து போனார்கள். ராஜசேகர ரெட்டியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடை பிடிக்கப்படுகிறது |
| பிரதமரே வேலை செய்தாலும் காமென்வெல்த் போட்டி மைதானம் தயாராகாது: நரேந்திரமோடி |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:39.12 AM ] |
காமன்வெல்த் போட்டி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரிய வில்லை. இப்போதுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கே இறங்கி வேலை செய்து தரையை துடைத்தாலும் கூட போட்டி தொடங்கும் முன்பு மைதானம் தயார் ஆகாது என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். |
| தற்கொலை செய்ய அனுமதி கேட்டு வழக்கு தொடுத்துள்ள 70 வயது பெண்மணி |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:35.10 AM ] |
முதுமையில் யாருமின்றி தனியாக நோய்களுடன் வாழும் 70 பெண்மணி ஒருவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். |
| போபால் விசவாயு கசிவு சம்பவத்தில் 7 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.43 AM ] |
மத்தியப் பிரதேச மாநில போபால் விசவாயு கசிவு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் 2 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது: வைகோ |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:23.45 AM ] |
முல்லப்பெரியாறு அணை உடைக்கப்பட்டால் தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் பாதிக்கப்படும். 2 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது. இதனால் ஏற்படக்கூடிய பாதகம் இரு மாநிலங்களுக்கும் தான் என்பதை கேரளம் உணர வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். |
| வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் ஆணை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:50.03 AM ] |
மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இது உச்ச நீதிமன்ற யோசனை அல்ல பிறப்பித்த ஆணைதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| வித்தியாசமான கதையை படமாக எடுத்த 'மிட்டாய்' பட இயக்குநருக்கு கொலை மிரட்டல் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 04:07.53 PM ] |
ஒரு பெண் இரு ஆண்களை ஒரே மேடையில் திருமணம் செய்யும் கதை அம்சத்துடன் மிட்டாய் என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்துக்கு எதிர்ப்புகள் வருகின்றன. சிலர் தொலைப்பேசியில் இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். |
|