| பென்னாகரம் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கமாட்டோம்: பாஜக |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:33.45 PM ] |
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சியையும் பா.ஜ. ஆதரிக்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| சாலையை விரிவுபடுத்தக்கோரி இரவில் மறியல் போராட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:26.41 PM ] |
அன்னூர் அருகே பாலத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பயணிகள் காயம் அடைந்தனர். அடிக்கடி விபத்து நடப்பதால் குறுகிய சாலையை விரிவுபடுத்தக் கோரி நள்ளிரவில் கிராம மக்கள் மறியல் செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| இந்தியாவில் மணிக்கு 65 பேர் புற்றுநோயால் மரணம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:21.38 PM ] |
இந்தியாவில் புற்றுநோயால் ஒரு மணி நேரத்துக்கு 65 பேர் உயிர் இழப்பதாக திருவனந்தபுரம் புற்றுநோய் சிகிச்சை மைய தலைவர் ஷெரியன் கோஷி தெரிவித்தார். |
| ஜல்லி பவுடரில் புதைந்து 3 பேர் மரணம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:14.27 PM ] |
சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று அதிகாலை லாரியில் இருந்து கொட்டப்பட்ட ஜல்லி பவுடரில் புதைந்து குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். |
| பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது கவலையளிக்கிறது: பாதுகாப்புத் துறை அமைச்சர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:37.45 AM ] |
நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவது கவலையளிப்பதாக உள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:32.10 AM ] |
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிப்பது பற்றி பேசுவதற்காக நீதிக்குழுக் கூடும் தேதியை அறிவிக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. |
| சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான மெட்ரிக் பள்ளிகள் வாதத்தை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:27.55 AM ] |
அரசு பள்ளி மாணவர்களை மட்டமாக கருதக் கூடாது மெட்ரிக் பள்ளிகளின் வாதத்தை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| தொழிலதிபரின் பணத்தை சுருட்டிய வங்கித்துணைத்தலைவர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:13.00 AM ] |
தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து, இணையம் மூலம் ரூ.26.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த தனியார் வங்கி துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். |
| உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு: பிரதமர் தெரிவிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 05:43.16 AM ] |
சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தொடர்ந்து, பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். |
| கல்கி ஆசிரமத்தை மூட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 01:59.37 PM ] |
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கல்கி ஆசிரமத்தை இழுத்து மூடவேண்டும் என ஆந்திர அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| பெட்ரோல் விலை உயர்வைக்கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 01:51.19 PM ] |
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி அதிமுகவினர் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஏப்ரலி ஜிஎல்விடி-3 விண்ணில் செல்லும்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 01:36.50 PM ] |
கிரையோஜெனிக் இன்ஜின் பொறுத்தப்பட்ட ஜிஎல்விடி-3, அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| ஆஸ்த்திரேலியாவில் இந்திய குழந்தை கொலைக்கு இனவெறி காரணமா? |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:40.54 AM ] |
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு சோகம் தொடர்கிறது. சுற்றுலா வந்த குடும்பத்தின் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது. கொலை யாளி பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். |
| பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துக்கொன்ற பாதிரியார் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:27.37 AM ] |
கேரளாவில் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக பாதிரியார் கைது செய்யப்பட்டார். |
| பென்னாகரத்தில் திமுக அமோக வெற்றி பெறும்: தங்கபாலு |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:21.27 AM ] |
பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். |
|