| சட்டப்பேரவைத் தேர்தல் 2011ல் எனது தலைமையில் புதிய கூட்டணி: இராமதாஸ் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:17.27 AM ] |
எதிர்வரும் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். அத்தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். |
| சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி: ஜி.கே.வாசன் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:09.36 AM ] |
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். |
| வாஜ்பாய் 13 நாளில் பதவியை ராஜிநாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா: மு.கருணாநிதி |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:05.52 AM ] |
முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளில் பதவியை ராஜிநாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அவருக்கு மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படி புரியும்? புரியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். |
| கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:55.27 AM ] |
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கையில் கிருஷ்ணா இவ்வாறு கூறினார். |
| வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் ஆணை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:50.03 AM ] |
மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இது உச்ச நீதிமன்ற யோசனை அல்ல பிறப்பித்த ஆணைதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| வித்தியாசமான கதையை படமாக எடுத்த 'மிட்டாய்' பட இயக்குநருக்கு கொலை மிரட்டல் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 04:07.53 PM ] |
ஒரு பெண் இரு ஆண்களை ஒரே மேடையில் திருமணம் செய்யும் கதை அம்சத்துடன் மிட்டாய் என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்துக்கு எதிர்ப்புகள் வருகின்றன. சிலர் தொலைப்பேசியில் இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். |
| நிருபமாராவ் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்திக்கமாட்டார்: சிறீலங்கா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 01:51.26 PM ] |
நிலையில் நிருபமாராவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தலைவர்கள் யாரும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை தெரிய வந்துள்ளது. நிருபமாராவின் கொழும்பு நிகழ்ச்சி நிரல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை நிருபமா சந்திப்பதற்கான விபரம் எதுவும் இடம்பெறவில்லை. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| மன்மோகன்சிங் நாளை திருப்பதி பயணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 12:32.52 PM ] |
பிரதமர் மன்மோகன்சிங் நாளை ஆந்திராவில் ஒரு நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக நாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையம் வந்து சேருகிறார். |
| ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 12:26.10 PM ] |
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த தீர்த் என்பவர் ஆமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். |
| நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதி முன்னால் பெண்ணை கடத்திய கும்பல் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:41.09 AM ] |
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் நுழைந்து நீதிபதி முன்னாலேயே பெண்ணை கடத்திச்சென்ற சம்பவம் அரியானாவில் நடைபெற்றுள்ளது. |
| சிறையிலிருக்கும் மதுகோடா மீது புதிய ஊழல் வழக்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:35.14 AM ] |
ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி மதுகோடா மீது மின்சார வசதி அளிக்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு ஒன்று கூறப்பட்டுள்ளது. |
| டாஸ்மாக்கில் மேலும் சில மதுபானங்களுக்கு அரசு ஒப்புதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:27.59 AM ] |
டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க செய்வதற்காக மேலும் 39 மதுபான வகை தயாரிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| கேரளாவில் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:14.08 AM ] |
கேரளாவில் சதித்திட்டத்துக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 10 பைப் வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| தமிழகத்தில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் 12 பேர் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:35.56 AM ] |
கொலை வழக்குகளில் இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேர் தூக்கு தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கிறார்கள். இதில் ஏற்கனவே ஜெயிலில் உள்ள 8 பேர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிவிட்டு காத்து இருக்கிறார்கள். ஒருவர் அப்பீல் செய்து இருக்கிறார். பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப வாய்ப்புள்ளது. |
| விஜயகாந்தால் சினிமாவில் மட்டும்தான் முதல்வராக முடியும் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:25.45 AM ] |
நடிகர் விஜயகாந்தால் சினிமாவில் மட்டும்தான் முதல்வராக முடியும் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வரமுடியாது என்று மத்திய மந்திரி நெப்போலியன் தெரிவித்துள்ளார். |
|