| மதுரையில் திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும்: ஜெயலலிதா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:35.44 AM ] |
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தாலும், திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார். |
| அரசுக்கெதிரான போராட்டம் வேண்டாம்: மு.கருணாநிதி |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:32.25 AM ] |
தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் இடைநீக்கம் ரத்து |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:28.39 AM ] |
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் தாற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டான்சியின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்படுகிறார். |
| திமுகவின் வெற்றிக்கு விஜயகாந்த் துணைபோகிறார்: பாஜக |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:54.46 AM ] |
தனி அணி அமைக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதன் மூலம், திமுகவின் வெற்றிக்கு அவர் துணை போவதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். |
| தமிழக சட்ட மேலவைக்கான தொகுதி வரையறைக்குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு வேண்டும்: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:45.38 AM ] |
தமிழக சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை குறித்த பிரச்னைகளை ஆராய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். |
| மாணவர் அசோக் மீதான தாக்குதல் வழக்கில் 7 போலீஸார் இடைநீக்கம் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:39.34 AM ] |
திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தக் காவல் நிலையத்தின் 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 போலீஸôர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி லத்திகா சரண் அறிவித்துள்ளார். |
| கலைஞர் 87 நூல் நேற்று வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:27.41 AM ] |
கருணாநிதியின் 87 வயதைக் குறிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் தமிழகத் தலைவர்கள் என 87 பேர் அவரைப் பற்றி தெரிவித்த கருத்துகள் கலைஞர் 87 என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி தொகுத்துள்ள அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாதமியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| கிராமத்தினர் எதிர்ப்பால் 4 மாதங்களாக வெளியூர்களில் தங்கி இருக்கும் குடும்பம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:44.16 AM ] |
மகளின் காதலன் தற்கொலை செய்துகொண்டதால் ஒரு குடும்பத்தினரை 4 மாத காலமாக ஊருக்குள் நுழைய விடாமல் கிராமத்தினர் எதிர்ப்புதெரிவித்துள்ள சம்பவம் திருவண்ணாமலையில் நடைபெற்றுள்ளது. |
| சட்டப்பேரவைத் தேர்தல் 2011ல் எனது தலைமையில் புதிய கூட்டணி: இராமதாஸ் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:17.27 AM ] |
எதிர்வரும் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். அத்தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். |
| சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி: ஜி.கே.வாசன் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:09.36 AM ] |
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். |
| வாஜ்பாய் 13 நாளில் பதவியை ராஜிநாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா: மு.கருணாநிதி |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:05.52 AM ] |
முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளில் பதவியை ராஜிநாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அவருக்கு மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படி புரியும்? புரியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். |
| டாஸ்மாக்கில் மேலும் சில மதுபானங்களுக்கு அரசு ஒப்புதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:27.59 AM ] |
டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க செய்வதற்காக மேலும் 39 மதுபான வகை தயாரிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| தமிழகத்தில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் 12 பேர் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:35.56 AM ] |
கொலை வழக்குகளில் இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேர் தூக்கு தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கிறார்கள். இதில் ஏற்கனவே ஜெயிலில் உள்ள 8 பேர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிவிட்டு காத்து இருக்கிறார்கள். ஒருவர் அப்பீல் செய்து இருக்கிறார். பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப வாய்ப்புள்ளது. |
| விஜயகாந்தால் சினிமாவில் மட்டும்தான் முதல்வராக முடியும் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:25.45 AM ] |
நடிகர் விஜயகாந்தால் சினிமாவில் மட்டும்தான் முதல்வராக முடியும் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வரமுடியாது என்று மத்திய மந்திரி நெப்போலியன் தெரிவித்துள்ளார். |
| திருப்பூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து 2 ரெயில்களை கவிழ்க்க சதி |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 07:05.00 AM ] |
திருப்பூர் அருகே சில வாரங்களுக்கு முன் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. தற்போது மீண்டும் திருப்பூர் அருகே 2 ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. |
|