தமிழ்நாட்டுச் செய்தி
அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது: தமிழக சட்டப்பேரவை மாஜி அதிகாரிகள் வீடுகளில் சோதனை
[ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 07:55.42 AM GMT +05:30 ]
தமிழக சட்டப்பேரவை முன்னாள் அதிகாரிகள் 4 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப்த்துறை பொலிஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழக முன்னாள் சட்டப்பேரவை செயலர் எம்.செல்வராஜ், அரசுப்பணிகளை மேற்கொள்வதாகக்கூறி தனது சொந்தப்பணிகளை செய்து இதன் மூலம் அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதன் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை இன்று நடைபெற்றது.

இவருடன் அப்போதைய குழு அதிகாரி பி.எஸ்.கே.சிங்காரவேலு, பிரிவு அதிகாரி எஸ்.பாலகிருஷ்ணன், இணை செயலர் கே. இந்திரா ஆகியோரது வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்திய தண்டனைச்சட்டம் 409, 109, ஊழல் தடுப்புச்சட்டம் 13(1), 13(2) மற்றும் 15 ஆகிய பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் இவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2007-11க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகளால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர்

பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை

சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை

ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை நாடகம் புரிந்த நபர் கைது

எதிர்க்கட்சியே பாராளுமன்ற முடக்கத்திற்கு காரணம் : சோனியா காந்தி குற்றச்சாட்டு

உலகின் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ]
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன். [மேலும்]
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]