தமிழ்நாட்டுச் செய்தி
சென்னையில் 7 வயது குழந்தைகளுக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை
[ சனிக்கிழமை, 07 யூலை 2012, 03:10.47 AM GMT +05:30 ]
சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 வயது பெண் குழந்தைக்கு ரோபோ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி அசூரா. சாலை விபத்தில் சிக்கிய அசூராவுக்கு சிறுநீர் வடிகுழாயில் காயம் ஏற்பட்டது.

இதனால் பிளாடரில் தேங்கும் சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறிக் கொண்டே இருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக 2011ம் ஆண்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் வடிகுழாய் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுநீரை சேமித்து வைக்கும் பிளாடரும் சுருங்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் டாக்டர்கள் குழுவினர், சிறுமியின் பிளாடரில் உள்ள தசை பகுதியையே குழாயாக(சிறுநீர் வடிகுழாய் போன்று) உருவாக்கி சிறுநீர் வெளியேறும்படி வழி ஏற்படுத்தினர்.

ஆனால் ஒரு வருடத்துக்கு பின்னர் சிறுமி அசூராவுக்கு சிறுநீர் வெளியேறுவதில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.

குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீபதி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்தால் செயற்கை குழாய் மூலமே ஆயுள் முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உருவாகும், என்பதால் ரோபாட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டது.

இதுகுறித்து டாக்டர் ஸ்ரீபதி கூறும்போது, சிறுநீர் பிளாடரை திறக்காமலேயே ரோபாட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் பிளாடரில் உள்ள தசையில் புதிய படுக்கையை உருவாக்கி அதன் மீது சிறுநீர் குழாயை பொருத்தி தையல்கள் போட்டோம்.

ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், பெரிய துவாரம் தவிர்க்கப்பட்டதுடன், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி அசூரா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி மற்ற குழந்தைகளை போன்று மகிழ்ச்சியுடன் உள்ளார். இந்த சிகிச்சைக்கு 2 லட்சம் செலவானது என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

திருமணம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன்: நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் கைது

மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்

சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்

ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

வட மாநிலங்களில் பேய் மழை: பலி எண்ணிக்கை 130ஆக உயர்வு

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இணையத்தில் வெளிட்ட பேஸ்புக் காதலன்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]