தமிழ்நாட்டுச் செய்தி
சிறை நிரப்பும் போராட்டத்தில் திமுக மிகப்பெரிய வெற்றி: கருணாநிதி
[ புதன்கிழமை, 04 யூலை 2012, 04:49.59 AM GMT +05:30 ]
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக, தற்போதைய அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்து இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது. 

தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சிகளான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

சேலம் இடைப்பாடியில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் குஷ்பு, தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் ஒவ்வொரு இடமும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றன.

இரண்டாம் இணைப்பு: போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 2500 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், நடிகை குஷ்பு என முக்கியஸ்கர்கள் கைதாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சிறைகள் தவிர வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளிலும் கைதானவர்கள் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்றாம் இணைப்பு: சிறை நிரப்பும் போராட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி பேட்டியளித்துள்ளார். தொண்டர்களை ஆந்திராவில் அடைப்போம் என்றெல்லாம்  அரசு மிரட்டல் விடுத்துள்ளது.

நாங்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டாலும் அஞ்சமாட்டோம். பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி இன்று நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என கருணாநிதி கூறியுள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:03.07 AM ]
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]