மகாராஷ்டிரா, அகமத் நகரின் ரகூரி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் அனுஷா கோர்படே என்ற 4 வயது சிறுவன் நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அங்குள்ள 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இதனை தற்செயலாக பார்த்த அவனது தாய் கூச்சலிட்டார்.
பின்னர் உடனடியாக கிராம மக்கள் ஒன்று கூடி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜெ.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மீட்புக்குழுவினர் 4 மணி நேரம் போராடி மாலை 5.45 மணியளவில் மனோஜை உயிருடன் மீட்டனர்.
கடந்த மாதம் அரியானாவில் மகி என்ற சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். 86 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆனால் நேற்று நடந்த சம்பவத்தில் சரியான நேரத்தில் உள்ளூர்வாசிகள் செயல்பட்டதால் அவன் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது அகமத் நகரில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனோஜ்கோர்படே அனுமதிக்கப்பட்டுள்ளான்.

|