இந்தியச் செய்தி
சிறைக்கைதியின் உலக சாதனை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40.03 AM GMT +05:30 ]
அகமதாபாத்தில் சிறையிலிருந்தபடியே அஞ்சல்வழி கல்வி மூலம் 31 பட்டங்கள் படித்து முடித்த மருத்துவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பானு பட்டேல். எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் கடந்த 2004ம் ஆண்டு பெரா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2005ம் ஆண்டு இவருக்கு அகமதாபாத் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து அவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள கிளினிக்கில் இவர் வேலையில் அமர்த்தப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து சிறை லைப்ரரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் மருத்துவர் பாலாசாகிப் அம்பேத்கர் திறந்த வெளிபல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் எம்எஸ்சி, பிகாம், எம்காம் மற்றும் பட்டமேற்படிப்பு டிப்ளமோ என 31 பட்டங்களை வாங்கிக் குவித்தார்.

சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு இவரது சாதனையை பாராட்டி அம்பேத்கர் பல்கலைக்கழகம் இவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கி கவுரவித்தது.

தற்போது இவர் மாநில சிறைகளில் உள்ள 26 தொலைதூர கல்வி மையங்களில் கைதிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சிறையிலிருந்தபடியே 31 பட்டங்களை பெற்ற இவரது சாதனை உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இதற்கான சான்றுகள் நேற்று அவருக்கு அளிக்கப்பட்டது. லிம்கா சாதனை புத்தகத்தின் 2013ம் ஆண்டுக்கான வெளியீட்டில் இவரது சாதனை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]