அசாமில் 10க்கும் அதிகமானவர்களால் இளம்பெண் மானபங்கம்: மாநில முதல்வர் கடும் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 13 யூலை 2012, 04:58.55 AM GMT +05:30 ]
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமாக மக்கள் கூடும் பகுதியில் இளம்பெண்ணொருவர் 10க்கும் மேற்பட்ட நபர்களால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்தில், அம்மாநில பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஜூலை 10ம் திகதி, கவுகாத்தி -ஷில்லாங் சாலையில் உள்ள மதுபானக்கடையொன்றில் தனது நண்பருடன் வந்த பெண்ணை, அங்கிருந்த நபர்கள் மானபங்கப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவர் பொலிஸ்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் தருண் கோகோய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]