இந்தியச் செய்தி
இந்தியாவின் முக்கிய நகரங்களை தகர்க்க லஷ்கர் அமைப்பு திட்டம்: அபு ஜிண்டால்
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 04:18.47 AM GMT +05:30 ]
இந்தியாவில் காஷ்மீர் உட்பட சில முக்கியமான நகரங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அபு ஜிண்டால் தெரிவித்துள்ளான்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய அபு ஜிண்டாலை சவுதி நாடு கடத்தி இந்தியாவிற்கு அனுப்பியது. இங்கு புதுடெல்லி விமானநிலையத்தில் கைதான ஜிண்டாலை தற்போது டெல்லி சிறப்புப்பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இவன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தகவல் சுரங்கமாக இருக்கின்றான். அவ்வமைப்பின் திட்டங்களை தெரிவித்து வருகின்றான்.

அவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ள தகவல்கள் குறித்து பொலிஸ் வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரைச் சேர்ந்த லஷ்கர் கொமாண்டர் ஒருவர்தான் ஜிண்டாலை அந்த அமைப்பிற்குள் கொண்டு வந்தார்.

அவரது பெயர் அஸ்லம் காஷ்மீரி. இன்னொரு லஷ்கர் தீவிரவாதியான ஃபயாஸ் காக்சி மூலமாக அவர் ஜிண்டாலை மகாராஷ்டிரத்தில் கடந்த 2005-ல் சந்தித்தார். அவருக்கு இந்திய முஸ்லிம் இளைஞர்களைத் தெரிவு செய்து தீவிரவாதப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எனவே அவர் மிகச் சுலபமாக ஜிண்டாலைத் தன் வழிக்குக் கொண்டு வந்தார். மும்பை மீதான தாக்குதலுக்கு முன்பும், பின்பும் ஜிண்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியுள்ளார். அங்குள்ள முஸாபராபாத்தில் லஷ்கர் அமைப்பின் காஷ்மீர் பிரிவுத் தலைமையுடன் நெருக்கமாகியுள்ளார்.

அந்த நகரில் ஐக்கிய ஜிகாத் சபை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான இது, புதிய தீவிரவாதக் குழுக்களை ஜம்மு காஷ்மீருக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய மரபு சாராத வழிகள் மூலமாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டு வருகிறது.

அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் தீவிரவாதிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் வழிபாட்டுத் தலங்களையும், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளையும் குறிவைப்பார்கள்.

காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள், லஷ்கர் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!

ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..!

தண்டையார் பேட்டையில் வாலிபர் வெட்டிப் படுகொலை

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

பஸ்ஸிலிருந்து பண மழை பெய்த அதிசயம்: பணம் பொறுக்குவதில் மக்களிடையே மோதல்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
முதன் முறையாக திருநங்கைக்கு அரசு பணி
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:05.57 AM ]
தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]