இந்தியாவில் 11 மாநிலங்களில் மாவோ பயங்கரவாதிகளின் அட்டூழியம் இருக்கின்றது.
இவர்கள் அரச பிரதிநிதிகளை கடத்துவது, ரெயில் தண்டவாளங்களுக்கு குண்டுவைத்து தகர்ப்பது என பல நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் மனம் திருந்தி, சரணடைந்தால் ரூ.1.5 லட்சம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தொகை ரூ.10 ஆயிரமாக இருந்து தற்போது 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஆயுதங்களுடன் சரணடைந்தால் ரூ.5 லட்சம் தருவதாகவும் மேலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை என 36 மாதங்களுக்கு தருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய திட்டங்கள் மூலம் உள்நாட்டு மாவோ தீவிரவாதிகளின் அட்டூழியங்களை குறைக்கமுடியுமென உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலாளர் அஜய் சத்தா தெரிவித்துள்ளார். |