கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை, வரலாறு: 1927ம் ஆண்டு கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார்.
சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என தமிழக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இவருடைய “நான் கிருஷ்ண தேவராயன்” என்ற வரலாற்றுப் புதினம் புகழ் பெற்ற ஒன்று. கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்திற்கு ரா.கி.ரங்கராஜன் வசனமும் எழுதியுள்ளார்.
சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர்.
வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன்.
1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு- என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன்.
மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர் ஆவர்.

|