தமிழ்நாட்டுச் செய்தி
நாளை ரம்ஜான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 09:24.40 AM GMT +05:30 ]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கவர்னர், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா: இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்கள் அற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகுக்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி: தொழிலாளர்களின் வியர்வை உலரும் முன் அவன் கூலியை கொடுத்து விடு, அநீதி செய்யும் அரசை எதிர்த்து பேராடு, உணவு தானியங்களை பதுக்கி வைத்து செயற்கை பஞ்சத்தை ஏற்படுத்தாதே, அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடு என்ற நபிகளின் மணிவாசகங்களை மனிதில் பதித்து எளியோருக்கு ஈந்து நோன்பு கடமைகளை நிறைவேற்றி, ரம்ஜானை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் ரோசய்யா: இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். குரானில் சொல்லப்பட்டுள்ள வாழ்வியல் நெறிப்படி வாழும் போது சிறந்த சமுதாயம் அமையும். இந்த விழா அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவம், சமூக ஒற்றுமைகளை வளர்க்கட்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏழை, எளியோருக்கு வழங்கி வாழ்ந்து காட்டும் இவ்வினிய நன்னாளில் சமய ஒற்றுமை தழைக்க, தமிழகத்தில் வளர்ந்தோங்கி வரும் நல்லிணக்கத்தை பேணி வளர்க்க சூளுரைத்து மதிமுக சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அரசியலில் குதிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா

காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு

அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஐவர் சுட்டுக்கொலை

எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்

7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்

'.IN.NET' விரைவில் இந்தியாவுக்கு வரும் புதிய இன்டர்நெட் முகவரி

ஐ.பி.எல் போட்டியால் வந்த விபரீதம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]