முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.
இந்நிலையில் மாலை நோன்பு திறக்கும் விருந்தான இப்தாருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துகொள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மாளிகை(ராஷ்டிரபதி பவன்) செய்தித்தொடர்பாளர், ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையாகிய ஜமாத்-உல்-விதாவை முன்னிட்டு இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளளனர் என்றார்.
இவர்கள் தவிர மத்திய அமைச்சர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உட்பட பலரும் இன்றைய இப்தார் விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

|