கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்காக தனது சீடர்களுடன் சுவாமி நித்தியானந்தா நேபாளம் சென்றிருந்தார்.
இவர் தன் நேபாள பயணத்தில் நடிகை ரஞ்சிதாவையும் அழைத்துச்சென்றார். இந்நிலையில் இந்த யாத்திரையை முடித்துக்கொண்டு நேற்று மாலை புதுடெல்லி வந்தடைந்தார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் ஊடகங்களை சந்தித்த நித்தியானந்தா, தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவ்வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் கடந்த வாரங்களில் சுவாமி நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட சிலரின் கடவுச்சீட்டுகள் புரோக்கர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கான விசாரணை இனி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |