இது குறித்து அவர் ராஜ்யசபா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், அடுத்த 2 மாதங்களில் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.
இது குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரைக்கும். ஆனால் இறுதி முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். இந்த முடிவு எடுப்பதில் பல அமைச்சகங்களுக்கு பங்கு உண்டு. டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறையின் சதவீதம் 5.8ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் பெட்ரோலுக்கு மானியமாக ரூ.43,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது என்றார். |