இந்தியச் செய்தி
கோவையில் கொடூரமான முறையில் காவலாளிகள் படுகொலை
[ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 06:03.22 PM GMT +05:30 ]
கோவையில் 2 காவலாளிகளை தலையில் கல்லை போட்டும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொன்ற கட்டிட தொழிலாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஆந்திராவை சேர்ந்த நாராயண ரெட்டி என்பவர், கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். பீளமேடு சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மணியகாரன் தோட்டம் பகுதியில் புதிதாக பங்களா கட்டி வருகிறார்.

ஓராண்டாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சவுரிபாளையத்தை சேர்ந்த இளங்கோ(63), ராமசாமி(69) ஆகியோர் காவலாளிகளாக பணியாற்றி வந்தனர். இளங்கோ நேற்று பகல் நேர பணியில் இருந்தார். அவரை மாற்றிவிட இரவு 8 மணிக்கு ராமசாமி வந்தார்.

சிறிது நேரம் கழித்து மணல் இறக்குவதற்காக லாரி ஒன்று வந்தது. கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாரி டிரைவர், காவலாளிகள் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு 2 காவலாளிகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து திடுக்கிட்ட அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். துணை கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவி கமிஷனர் சந்திரமோகன் மற்றும் பொலிசார் வந்து, இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணி(28) என்பவர்தான் இரட்டை கொலையை செய்தது தெரியவந்தது. மணி, சில மாதங்களாக அந்த கட்டிடத்திலேயே தங்கி வேலை செய்து வருகிறார்.

தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து காவலாளிகளிடம் தகராறு செய்துள்ளார். கடந்த மாதம் ஆறுமுகம் என்ற காவலாளியை விரட்டி விட்டுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு போதையில் இருந்த மணி, வழக்கம்போல காவலாளிகளிடம் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த கல் மற்றும் இரும்புக்கம்பியால் இருவரையும் மணி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவர்கள் அதே இடத்தில் இறந்தனர். இரட்டை கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவாக உள்ள மணியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ராஜஸ்தானில் அனல் மின்சார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் சோனியா காந்தி

இந்தியாவின் உத்தரகாண்டில் பேரழிவு: 1000 இற்கும் மேற்பட்டோர் பலி

இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் ஆசிரியை உள்பட 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறுநீர் கழிப்பிடம் வேண்டும்: போர்க்கொடி உயர்த்தும் பெண்கள்

மின் கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: பெண் உடல் கருகி பலி

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தவித்த 800 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

தேவக்கோட்டை அருகே கணவனை கொலை செய்த மனைவி

விம்பிள்டனில் தொடக்க ஆட்டத்தை நிர்ணயிக்கும் இந்திய சிறுமி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஆழ்வார்ப்பிள்ளை பஞ்சலிங்கம்
பிறந்த இடம்: புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்: டென்மார்க்
பிரசுரித்த திகதி: 16 யூன் 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செ.இலகுப்பிள்ளை, இ.நாகம்மா
பிறந்த இடம்: புங்குடுதீவு 4ம், 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 20 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]