சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலைதான் உள்ளது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேவைதானா? இந்த முடிவுக்காக மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களான தாஜ் ஹோட்டல் முன்பும், சி.எஸ்.டி இரயில் நிலையம் முன்பும், இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களை நிற்க வைத்து சவுக்கால் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எதிர்த்துள்ளதற்கும் பால்தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார். |