தீவிரவாதிகள் ஊடுறுவும் பொருட்டு இந்திய எல்லையில் மர்ம குகை (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 05:53.35 AM GMT +05:30 ]
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் எளிதாக ஊடுறுவும் வசதியில் மர்ம குகையொன்றை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சில்லாயாரி பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கான முகாம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.
இங்கு எல்லைப் பாதுகாப்புப்படையினர் ரோந்து சென்ற போது குகையொன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இக்குகை பாகிஸ்தான் எல்லையில் தொடங்கி இந்தியா வரை பரவிக்கிடக்கிறது. 3 அடி நீளமும், 3 அடி விட்டமும் உள்ள இக்குகை, 25 அடி ஆழத்திலும், 400 மீ நீளம் கொண்டது.
உடனடியாக எல்லைப்பாதுகாப்புப்படையினர் இக்குகை வழியாக சென்று ஆய்வு நடத்தினர். இது பாகிஸ்தானை எல்லை வரை சென்றதால் தீவிரவாதிகள் ஊடுருவ தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, அப்பகுதியில் மழை பெய்திருந்ததால், குகைக்குள் செல்ல முடியவில்லை. தண்ணீர் வெளியேற்றப்பட்டதும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் குகைக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
இது குறித்து எல்லைப்பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி. என்.எஸ். ஜம்வால் கூறுகையில், உள்ளூர் விவசாயிகள் இக்குகை பற்றி விவரங்களை தெரிவித்துள்ளனர். தற்போது சோதனை நடந்துவருகிறது.
இந்தியாவிற்குள் ஊடுருவும் பொருட்டு இக்குகை கட்டப்பட்டதாகவும் அதுவும் மிக சமீபமாகவே கட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]