தமிழ்நாட்டுச் செய்தி
சென்னையில் கேபிள் டிவி அதிபர் வெட்டிக் கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:42.56 PM GMT +05:30 ]
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் தொழில் போட்டி காரணமாக கேபிள் டிவி அதிபர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் அன்பு (56). கேபிள் டிவி நடத்தி வந்தார். இவரது மனைவி வேளாங்கண்ணி. ராஜேஷ் என்ற மகனும், கவிதா, அனிதா என்ற மகள்களும் உள்ளனர்.

தற்போது, இதே பகுதியில் புதிதாக குடியேறியவர்களுக்கு அன்பு கேபிள் டிவி இணைப்பு கொடுத்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் ஆத்திரம் அடைந்தனர். ‘புதிய வீடுகளுக்கு நாங்கள் இணைப்பு கொடுக்க இருந்தோம். நீ எப்படி கொடுக்கலாம்’ என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். கேபிள் வயர்களையும் அறுத்து எறிந்தனர். மின் இணைப்பு கொடுப்பதிலும் இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் அன்பு புகார் செய்தார். செல்வம் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டுக்கு வெளியே அன்பு பேசிக் கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்த 7 பேர், பயங்கர ஆயுதங்களுடன் அன்புவை நோக்கி ஓடி வந்தனர். மிரண்டுபோன அன்பு, அலறியடித்து ஓடினார். துரத்திச் சென்ற கும்பல், மீன் மார்க்கெட் அருகே அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அன்புவை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன், எஸ்ஐ சிவகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கண்ணகி நகரைச் சேர்ந்த செல்வம், டூமா (எ) சதீஷ், சரோஜா, தொத்துவாய் சரவணன், நொண்டி கணேசன், அரசு, சுந்தர், ஸ்டீபன் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரோஜாவை கைது செய்தனர்.

தப்பி ஓடியவர்களை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் திருஞானம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கண்ணகிநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்