இந்தியச் செய்தி
பனியில் புதைந்து 17 ராணுவ வீரர்கள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 06:34.43 AM GMT +05:30 ]
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர பனிப்புயல் வீசியது. அங்குள்ள ராணுவ முகாமை பனி மூழ்கடித்தது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பனியில் சிக்கினர். இதில் 17 பேர் பலியாயினர்.
வடமாநிலங்களில் இந்த ஆண்டு பனிப் பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீரில் அடிக்கடி பனிப்புயல் வீசி மக்களை திணறடிக்கிறது. சாலைகளில் பனிப் பாறைகள் பாளம், பாளமாக சரிவதால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் கிலன்மார்க் பகுதியில் உள்ள மலை உச்சியில் ராணுவ முகாம்கள் உள்ளன. குல்மார்க்கில் உள்ள முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்தனர். இங்கு கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்தது. நேற்று காலை திடீர் என்று கடுமையான பனிப்புயல் வீசியதில் ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன.

சுமார் 350 ராணுவ வீரர்கள் பனிப்புயலில் சிக்கிக் கொண்டனர். அப்போது பனிப்பாறைகளும் சரிந்தன. இதில் 100 வீரர்கள் இருந்த ஒரு முகாமின் ஒரு பகுதி பனிக்குள் புதைந்தது. உடனடியாக மீட்புக் குழு விரைந்து சென்று பனிக்குள் புதைந்தவர்களை மீட்க போராடியது. 17 பேர் உடல்கள் பனிப் பாறைகளுக்குள் இருந்து மீட்கப்பட்டன. 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்து போனவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி. மற்றவர்கள் சிப்பாய்கள்.
 
இது குறித்து ராணுவ அமைச்சக அதிகாரி கூறுகையில், ‘‘கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. பனிப்புயலில் ராணுவ வீரர்கள் சிக்கிய தகவல் கிடைத்தவுடன் ஆங்காங்கே முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்காக விரைந்தனர். 17 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. 70 பேர் மீட்கப்பட்டதில் 15 பேர் நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் இருவரை காணவில்லை’’ என்றார்.

பாரமுல்லா போலீஸ் சூப்பிரண்ட் கூறுகையில், ‘‘ குல்மார்க் மலை 8 கி.மீ. உயரத்தில் உள்ளது. 10 ஆயிரம் அடி உயரத்தில் குளிர்கால போர் பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தான் பனிப்புயல் தாக்கியுள்ளது’’ என்றார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜே.எஸ். ப்ரார் கூறுகையில், ‘‘ ராணுவத்துக்கு இது ஒரு துயரச் சம்பவம். ஆழமான பனிக்குள் இறங்கி காணாமல் போனவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். இறந்தவர்களில் பிரதீக், லெப்டினென்ட் அந்தஸ்தில் உள்ள அதிகாரி. மற்றவர்கள் மலை உச்சி போர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்தவர்கள்’’ என்றார்.

புயல் எச்சரிக்கை:

பனிப்புயல் ஆராய்ச்சி மையம் நேற்று முன்தினமே புயல் எச்சரிக்கை விடுத்தது. மலை உச்சிகளில் பனிப்புயல் வீசக்கூடும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பனிப் பொழிவின் போது வீதிகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இன்னும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பனிப்புயல் வீசும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காஷ்மீரில் ஜவகர் குகைப் பாதை, காஷ்மீரின் நுழைவு வாயில், ஸ்ரீநகர்&ஜம்மு நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் தான் ஆபத்து குறைவானவை என்றும் பிற பகுதிகளை பனிப்புயல் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் நேற்று மீண்டும் எச்சரிக்கப்பட்டது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்