| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| பெட்ரோல் விலை உயர்வைக்கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 01:51.19 PM GMT +05:30 ] |
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி அதிமுகவினர் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
தென்சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மாநில மருத்துவ அணி தலைவர் மைத்தேயன் எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆனாலும் இதுபற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. ஏழை, எளிய மக்களின் துயரங்களை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கின்றனர்.
அதே நேரத்தில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல், பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்யும் வகையில் டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. பெட்ரோல் டீசலுக்கு தமிழக அரசு விதிக்கும் வரியை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன், பதர்சயீத், ஜெ. பேரவை சின்னய்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|