இந்தியச் செய்தி
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு: பிரதமர் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 05:43.16 AM GMT +05:30 ]
சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தொடர்ந்து, பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வருவதால், மசோதாவை விவாதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ‘பெண்களின் தலைமைப் பண்பு’ என்ற கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க அரசு கடமைப்பட்டு உள்ளது. இதற்காக எந்த முயற்சியில் வேண்டுமானாலும் ஈடுபடுவோம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததால் அடித்தளத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. இதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படும். இதை விரைவில் அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் குறைவாக இருப்பதும், மகப்பேறு காலத்தில் உயிர் இழப்புகள் ஏற்படுவதும், பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு 25.1 சதவீதமாகத்தான் இருக்கிறது. இது முன்னேற்றம்தான் என்றாலும், நாம் விரும்பிய முன்னேற்றத்தை இன்னும் அடையவில்லை.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய அறிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் வாசித்தார். அதில், ‘இந்த நாட்டுப் பெண்கள் தடைகளை உடைத்தெறிந்து விட்டனர். எனினும் கிராமங்களில் உள்ள நமது சகோதரிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்’ என்று சோனியா வலியுறுத்தி இருக்கிறார்.

மக்களவை சபாநாயகர் மீரா குமார் பேசுகையில், ‘‘தேவதைகளை வணங்குவது நமது பாரம்பரியம். ஆனால், நடைமுறையில் அது வேறு விதமாக இருக்கிறது. எல்லா வீட்டு வேலைகளையும் பெண்களே செய்கிறார்கள். நாட்டின் மொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். படித்த சமுதாயத்தில் கூட வரதட்சணைக் கொடுமை நடக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு நிதியை பெண்கள் முன்னேற்றத்துக்காக ஒதுக்க வேண்டும்’’ என்றார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்