இந்தியச் செய்தி
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துக்கொன்ற பாதிரியார்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:27.37 AM GMT +05:30 ]
கேரளாவில் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் போற்றுக்கல் என்ற இடத்தில் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு கண்ணூர் மாவட்டம் கேளகம் பகுதியை சேர்ந்த அனு (16) என்ற மாணவி தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் விடுதியில் அனு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி போற்றுக்கல் போலீசார் விசாரித்தபோது, அனு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகிகள் கூறினர். ஆனால், அனு கொலை செய்யப்பட்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கை உள்ளூர் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வழக்கு குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான தனிப்படை நடத்திய விசாரணையில், அனு பலாத்காரம் செய்யப்பட்டதும், உணவில் எலி விஷம் கலந்து கொடுத்து அவர் கொல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பத்தனாபுரம் பகுதியை சேர்ந்த பாதிரியர் ஜோசப் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்