இலங்கைச் செய்தி
முகாம் மக்களை மறுகுடியமர்த்த இலங்கைக்கு நிதியுதவி: இந்தியா பரிசீலனை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:41.50 PM GMT +05:30 ]
முகாமில் தங்கியுள்ளவர்களை மறு குடியமர்த்துவதற்கு கூடுதல் நிதியுதவி கேட்கும் இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
பெங்களூர் மாரத்தஹள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா இது குறித்து கூறியதாவது:

முகம்களில் தங்கியுள்ள குடிமக்களை மறு குடியமர்த்துவதற்கு கூடுதல் நிதியுதவி கேட்கும் இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள குடிமக்களுக்கு வீடுகட்டி கொடுக்க கட்டுமானப்பொருட்கள் தேவைப்படுவதாக இந்தியாவை இலங்கை கேட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே ஓரளவு உதவியுள்ளது. மேலும் உதவிசெய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அங்கு வாழும் தமிழர்களின் நிலைமை மேம்பட்டு வருகிறது. முகாமில் 90 ஆயிரம் குடிமக்கள் தங்கியுள்ளனர். முகாமில் இவர்கள் அங்குமிங்கும் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சீனாவின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு அருணாசலபிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆசியமேம்பாட்டு வங்கி நிதியுதவியை பெற இந்தியா தயங்குவதாக தவறான செய்தி பரவியுள்ளது. சீனாவின் நிர்பந்தத்திற்கு நாம் அடிபணியவில்லை. அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம். எனவே, வழக்கம் போல அம்மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நம் சொந்த நிதியில் செய்வோம். எனவே, உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவி அவசியமிருக்காது.

காபூலில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு பயந்து நாடு திரும்ப விரும்பவில்லை. எனினும், குடும்ப காரணங்களை சுட்டிக்காட்டி பணியிடமாற்றம் கேட்டால், அதை அரசு பரிசீலிக்கும்.

இந்திய தூதரகத்தின் மீது இரண்டு தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு, 3&4 மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது இந்திய தூதரக ஊழியர்களிடம், நாடு திரும்ப யாராவது விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, யாரும் இந்தியா திரும்ப முன்வரவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்குள்ள ஐ.எப்.எஸ். அதிகாரிகளின் மன உறுதி மற்றும் தீர்வுகாணும் திறன் இதன் மூலம் வெளிப்படுகிறது. இந்தியர்களை குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு ஓட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு, இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்