| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| சுங்கத்துறை அதிகாரியை கொலை செய்தது ஏன்? - துணை நடிகை வாக்குமூலம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:17.11 AM GMT +05:30 ] |
“கோயில் விழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சுங்கத் துறை அதிகாரியை வெட்டிக் கொலை செய்தோம்” என்று துணை நடிகை பவுலினா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். |
ஆதம்பாக்கம் ஆபிசர் காலனி 5வது தெருவை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரி சாம்சன் (43). கடந்த 28ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக துணை நடிகை பவுலினா, அவரது மகன்கள் இளையராஜா, மணிகண்டன் உட்பட 12 பேர், செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களிடம் 5 நாள் விசாரணை நடத்த ஆலந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் போலீசுக்கு அனுமதி கொடுத்தது.
ஆதம்பாக்கம் போலீசார் பவுலினா உட்பட 12 பேரிடமும், மடிப்பாக்கம் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பவுலினா அளித்த வாக்குமூலம் பற்றிய விவரம் வருமாறு:
எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள கோயிலில், விழா நடத்துவதற்காக ஆதம்பாக்கம் பகுதி மக்களிடம் பணம் வசூல் செய்வோம். அவ்வாறு வசூல் செய்யப்பட்ட பணத்துக்கு சுங்கத் துறை அதிகாரி சாம்சன் கணக்கு கேட்டு தொல்லை செய்வார். இதுதொடர்பாக அவருக்கும் எங்களுக்கும் விரோதம் ஏற்பட்டது.
மேலும், எனது மகன் இளையராஜா விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தான். அவனை திடீரென்று வேலையில் இருந்து நீக்கவிட்டார்கள். இதற்கும் சாம்சன்தான் காரணம். அவரது வீட்டில் ரகசிய கேமராக்கள் வைத்து, எங்கள் வீட்டுக்கு வந்து செல்பவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தார்.
இதனால், எனது மகனின் நண்பர்கள் மூலம் சாம்சனை கொலை செய்தோம். இவ்வாறு பவுலினா கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|