தமிழ்நாட்டுச் செய்தி
சென்னை நகைக்கடையில் துளை போட்டு ரூ.4 கோடி நகைகள் கொள்ளை
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:47.01 PM GMT +05:30 ]
சென்னை பூந்தமல்லி அருகே நகைக்கடை சுவரில் துளை போட்டு ரூ.4 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பஸ் நிலையம் அருகே விகேஷ் என்ற பெயரில் நகைக்கடை, அடகுக்கடை வைத்திருப்பவர் பர்சன் சந்த். ராஜஸ்தான் மாநிலம் பிப்பாட் சிட்டி பகுதியை சேர்ந்தவர். நகைக்கடையை பர்சன் சந்த் மகன்கள் தினேஷ், ரூபேஷ், விகேஷ் நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு 9 மணியளவில் வியாபாரம் முடிந்ததும் அலார மணியை ஆன் செய்து விட்டு கடையை பூட்டினர். இன்று காலை 8.45 மணியளவில் வழக்கம்போல தினேஷ் கடையை திறந்து உள்ளே சென்றார். ஷோகேஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகைகள், பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தந்தைக்கும் பூந்தமல்லி போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.

பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜூட் துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் அருள் சந்தோசமுத்து, இளங்கோ, சித்தார்த்ராய் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘தண்டர்’, குமணன்சாவடி வரை ஓடி சென்று திரும்பிவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

நகைக்கடை மற்றும் அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைகளை போலீசார் பார்வையிட்டனர். நகைக்கடையை ஒட்டி கரீம் என்பவருக்கு சொந்தமான ரியாஸ் டிம்பர் என்ற மரக்கடை உள்ளது. இதன் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே புகுந்துள்ளது. பின்னர் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு நகைக்கடை சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்துள்ளனர். முதலில் அலார மணிக்கான இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த அனைத்து நகைகளையும் மூட்டை, மூட்டையாக கட்டி அள்ளி சென்றுள்ளனர். விலை உயர்ந்த வெள்ளி பொருட்கள் மரக்கடையின் பின்புறம் சிதறி கிடந்தது. அவற்றை போலீசார் மீட்டனர்.

எந்நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை பற்றி கடை உரிமையாளர் பர்சன் சந்த் கண்ணீர்மல்க கூறியதாவது:

கடையில் 8.5 கிலோ தங்க நகை, 30 கிலோவுக்கும் அதிகமாக வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்பில் அடமான நகைகள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அனைத்தும் கொள்ளை போய்விட்டது. 13 ஆண்டுகளாக கடை நடத்துகிறேன். கடைக்கு பக்கத்தில்தான் கூட்டு குடும்பமாக வசிக்கிறேன். இந்த பகுதியில் இவ்வளவு பெரிய திருட்டு நடந்ததே இல்லை. ஜன நெருக்கடி அதிகம் உள்ள இடத்தில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எங்களது மொத்த உழைப்பும் ஒரே நாளில் வீண் போய் விட்டது.

இவ்வாறு பர்சன் சந்த் கூறினார்.

நகைக்கடையில் துளை போட்டு புகுந்து ரூ.4 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், அடமான நகைகள், ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கரையான்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நகைக்கடை சுவரில் துளை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் சென்னை புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம்கட்டளையில் 2 மாதம் முன்பு இதேபோல கொள்ளை நடந்தது. முகப்பேர் வாவின் சாலையில் கடந்த மாதம் கொள்ளை நடந்தது.

பக்கத்து கடை வழியாக புகுந்த கொள்ளையர்கள், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு திருடிச் சென்றனர். அதேபோல தற்போது கரையான்சாவடியில் கொள்ளை நடந்துள்ளது. முகப்பேரில் கைவரிசை காட்டிய கும்பலே தற்போதும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்